உங்களுக்குள், நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும்
என்பதற்காகத்தான், துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு, இதை
உபதேசிப்பது. ஆகையினால். நமது மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல்
வேண்டும்.
ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால்,
ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம், உப்பு போன்ற நிலைகள்
இருந்தால், அது காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக் காண
முடியாமல் போய்விடும்.
நாம் எத்தனையோ கோடி
உடல்களில், இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும்
மற்றொன்றைத் துன்புறுத்தி, உணவாக உட்கொண்டோம். இப்படி, பல நரக
வேதனைப்பட்டு, தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம், மனித உடல்
பெற்றது நமது உயிர்.
இந்த மனித உடலை உருவாக்கியது
நமது உயிர் என்றாலும், ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச்
சேர்த்து, அதன் உணர்வுக்கொப்ப, அந்தந்த உடல்களில், அதைக் காத்திடும்
ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று, இன்று மனிதனான இந்த உடலுக்குப்
பின்,
உயிர் நம்மை உருவாக்கியது என்று
எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு,
என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.
இந்த மனித உடலில் ஆறாவது அறிவில், விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும்
ஞானம்தான், துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள
அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை. அதைப் பெறும் நிலையாகத்தான்,
இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.
ஆகையால்,
நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும்
பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான், இன்று துருவ
நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.
நாம் இந்த உடலை விட்டு, எந்த நிலையில் சென்றாலும்,
ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்),
உயிருடன் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில், நாம் இணைந்திடல் வேண்டும்.
ஆகவே, அங்கே இணைந்து விட்டால், அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு,
பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும், அந்தந்தப் பிரபஞ்சங்களில்
தோன்றிய உயிரணுக்கள், அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.
எத்தனையோ கோடி ஆண்டுகள், என்றும் ஏகாந்த நிலை என்ற, அந்த நிலை பெறுவது,
இந்த மனித உடலில்தான். ஆனால், நம்முடைய இந்த சந்தர்ப்பம், மிகப் பெரிய
சக்தி வாய்ந்த, குருவின் அருளைப் பெற்றதினால், நம் அனைவருக்கும் அந்த
பாக்கியம் கிடைத்துள்ளது.
நாம் அனைவரும் அவர்
காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி,
மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம். எமது அருளாசிகள்.
8. உயிரே கடவுள்
சூரியனில் விளைந்த உயிரணுவாக உருப்பெறச் செய்யவல்ல நுண்ணணுவும், ஒவ்வொரு
நட்சத்திரத்தில் விளைந்த கதிரியக்க நுண்ணணுவும், வியாழன் கோளில் விளைந்த
சத்தும், ஒவ்வொரு கோளில் விளைந்த சத்தும், சந்தர்ப்பவசத்தால், இந்த நான்கு
ஆற்றல்களும் ஒன்று சேர்ந்தால், ஓர் கருவாகி, துடிப்புள்ள உயிரணுவாகின்றது.
அதாவது, உயிரணுக்குள் வெப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பவசத்தால், தாவர இனச் சத்துக்களில் இத்தகைய உயிரணு வீழ்ந்தால்,
அந்தத் தாவர இனச் சத்தை, உயிரணு ஈர்த்து,
உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம்,
தாவர இனத்தின் சத்திற்குள் மறைந்திருக்கும்,
வெப்ப அணுக்களை இயக்கி,
புழுவாக உருப்பெறச் செய்கின்றது.
அதாவது, உயிரணுவின் துடிப்பினால்,
உயிரணுவிற்குள் ஏற்படும் வெப்பம்
புழுவின் உடலுக்குள் மறைந்திருக்கும் வெப்ப அணுக்களை, இயக்கி,
உடலை வாழ, வளரச் செய்யும்,
(உயிரணுவிற்குள்) வெப்பமாக இருந்து,
உயிராக இயங்கும், உயிரே கடவுள்.
புழுவாகி, உடல் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் புழு உட்கொண்ட
இரையும், சுவாசித்த உணர்வுகளும், உடலில் நுண் அணுக்களாக விளைந்து, விளைந்த
நுண் அணுக்கள், புழுவின் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாகச் சேர்ந்து,
உயிராத்மாவாகி, புழு இறந்தபின், புழுவின் உயிராத்மா பரமாத்மாவில்
கலக்கின்றது. பரமாத்மாவில் கலந்துள்ள, புழுவின் உயிரான்மா, மறு பிறவியில்
பூச்சியாகப் பிறக்கின்றது.
இவ்வாறு ஒவ்வொரு உடலிலும்,
உட்கொண்ட உணவுகளுக்கும், பற்பல குணங்களின் உணர்வுகளுக்கொப்ப, பல்லியாக,
பாம்பாக, பறவையாக, மிருகமாக, இவ்வாறு மனிதன் வரை உருப்பெறச் செய்த
“உயிரே கடவுள்”. எண்ணும் எண்ணமே இறைவன்.
உணர்வுகளின் செயல்களே தெய்வங்கள்.
9. உன் உயிரான ஆண்டவனுக்குச் செய்யும் பணி
உயிரே கடவுள். உன் உடலை ஆள்பவனும், ஆண்டவனாக இருப்பவனும், உன் உயிர்தான்.
உடலின் இயக்கத்தின் உணர்வில், எழும் எண்ணத்தினால், சுவாசிக்கும் உணர்வே
(உன் உயிர்) இறையாகி, உடல் வளர இறைவன் ஆகின்றான்.
உன்
உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலை, உன் சொல்லின் செயலின் ஆற்றலும்,
அதாவது, மயில்துத்தத்தைக் (விஷத்தை) கண்களால் பார்க்கின்றாய் என்று
வைத்துக்கொள். அதைப் பார்க்கும் பொழுது, அமைதி கொண்டிருக்கின்றது. ஒரு
தீங்கும் செய்வதில்லை. அதை நீ சாப்பிட்டால், உன் உடலின் இயக்கமே மாறுபட்டு,
குமட்டலும் வாந்தியும் வரச் செய்கின்றது. உடலைச் சோர்வடையச் செய்கின்றது.
இறந்துவிடுவோமோ என்று தோன்றுகின்றது.
இதைப் போன்றே,
மிளகாயைப் பார்க்க அமைதியாகத் தெரிகின்றது. சாப்பிட்டாலோ, “ஆ” என்று அலறச்
செய்கின்றது. காரத்தைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச்
சென்று, குடிக்கச் செய்கின்றது.
சுவையான இனிப்பைச்
சாப்பிட்டாலோ, மனது மகிழ்ச்சியடைகின்றது. ஆனால், இனிப்பு அதிகமாகிவிட்டாலோ,
அதைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று குடிக்கச்
செய்கின்றது. இதைப் போன்றே, நீ சுவாசிக்கும் உணர்வின் செயலே, தெய்வம்
ஆகின்றது. தெய்வச் செயலாக அமைகின்றது.
நீ
வாழ்க்கையில் பற்பல குணங்கள் கொண்ட மனிதர்களிடம் தொடர்பு கொள்ளும்
சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அச்சமயம் எதிர்பாராது, ஒரு முரடனிடம்
வாக்குவாதங்கள் முற்றுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நீ உனக்குள் வலுவை
மனதில் வைத்து “உன்னை அழித்துவிடுகிறேன் பார் என்று முரடனைப் பார்த்துச்
சொல்கிறாய்”. உன் சொல்லில் வெளிப்படும் உணர்வுகள் முரடனின் செவிகளில்
ஒலித்து, அவன் உடலின் உணர்வுகள் உந்தப்பட்டு, உன்னை அழித்துவிடும் எண்ணம்,
அவனுக்கு அதிகம் உருப்பெறுகிறது.
இந்தச்
சந்தர்ப்பத்தில் நீ சுவாசிக்கும் உணர்வுகள், உன் இரத்தத்தில் கலந்து,
முரடனை அழித்துவிடும் எண்ணத்தை உணர்த்திக் கொண்டே இருக்கும்.
முரட்டுத்தனமான உணர்வுகள், உன் உடலில் சேர்ந்து கொண்டு, வினையாக விளைந்து,
உன் உடலில் ஆத்மாவாகச் சேர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைகள், அணுசிசுக்களாக
உருப்பெற்று விடுகின்றன.
உன் உடலை விட்டு, உயிர்
வெளியே செல்லும் பொழுது, உயிரின் ஈர்ப்பில், வளர்ச்சி பெற்ற உன் உணர்வின்
வினைகள், மறு பிறவியில் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் மிருக உருவமாக,
உடலைப் பெற்றுவிடும் என்று, உணர்வாகவும் காட்சியாகவும் உணர்த்தினார்.
இதையெல்லாம் அறிந்ததும், என்னையறியாது எனக்குப் பய உணர்வுகள் வந்துகொண்டிருந்தது.
என் சொல்லும் செயலும்,
நன்மை செய்யும் நிலை பெறவேண்டும்.
என் சொல்லும் செயலும்,
பிறருக்குத் தீங்கு செய்யாது காக்க வேண்டுமென்று
குருதேவரிடம் வேண்டினேன்.
அவர் பலமாகச் சிரித்துவிட்டு, “உயிரே கடவுள்” அவன் வீற்றிருக்கும் ஆலயம்
உன் உடல். அதில் அசுத்தம் சேராது காக்க வேண்டியது, உன் கடமை. உன்னையறியாது
அசுத்தமாவதைச் சுத்தம் செய்வது, உன் பொறுப்பு என்று கூறினார்.
இந்தப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்து,
வாழ்க்கையில், தன்னுள் சேர்த்த தீய உணர்வுகளை மாய்த்து, மகரிஷிகளாகி,
உயிருடன் உணர்வுகள், ஒளியின் ஒளியாக ஒன்றி,
ஒளியின் உருவமாக ஒளிர்ந்து,
விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு,
அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றலைக் கொண்டு,
மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வின் ஒளி அலைகளை, உனக்குள் சேர்த்து,
உன்னையறியாது உன்னில் சேர்ந்த, தீய உணர்வுகளை மாய்த்து, உன் எண்ணம், சொல்,
செயல், புனிதம் பெறு.
இதுவே உனக்குள் உயிராய் வீற்றிருந்து, உன்னை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு, நீ செய்யும் பணியாகும்.
இப்பணியில், ஆண்டவனின் பணியாக,
நீ ஒளி நிலை பெறுவாயாக! என்று ஆசீர்வதித்தார்.