ஆனால் ஏன் குரு குரு என்று ஓட வேண்டும்? அந்த குருவே நம்மை ஆட்கொள்ள மாட்டாரா? ராமகிருஷ்ணர் விவேகானந்தரை சீடனாக்க எவ்வளவு முயன்று வெற்றி பெற்றார். பின்னர் அவரருளால் விவேகானந்தர் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.

குரு என்று நாம் தேடி சிந்தயை குழப்பிகொள்ளாமல் குரு கிடைப்பார் என்ற நிலை இருந்தால் அது தானாக நடக்கும். இல்லையே அந்த ஈசனே குருவாக வந்து அருள் புரிவார்.
பட்டினத்தார் சித்தரின் கதை அனைவருக்கும் தெரிந்ததே. ஈசனல்லவா வந்து அவருக்கு உபதேசம் செய்து அவரை ஆட்கொண்டாரல்லவா.


