தென்காசி:
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில்
ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் மஹோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்
துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. புனலூர்
கருவூலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள
திருஆபரணங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவில் தினமும் காலை,
மாலை வேளைகளில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் அன்னதானமும்,
சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. முக்கிய நாளான டிசம்பர் 24ம் தேதி
காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி ஆராட்டு விழா
நடக்கிறது. 26ம் தேதி மஹோற்சவ நிறைவு பெறுகிறது.