திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை நடந்து வருகிறது. இந்தியா
முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலையில் குவிந்து
வருகின்றனர். தற்போது தினமும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பகல் 1.30 மணிக்கு சாத்தப்படுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இரவு நடை சாத்தப்பட்ட பிறகு 18ம்படி ஏற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் வெகு தொலைவிலிருந்து வரும் பக்தர்கள் மிகுந்த சிரமப்படுவதுடன், மறுநாள் காலை நடை திறக்கும் வரை 18ம்படி முன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. இதுகுறித்து தேவசம் போர்டுக்கு புகார்கள் வந்தன.
காலையில் நடை திறக்கப்படும் போது கடும் நெரிசலும் ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக இரவில் நடை சாத்தப்பட்ட பிறகு வரும் பக்தர்களை 18ம் படி ஏற அனுமதிக்க தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இதன்படி இருமுடிக்கட்டுடன் வரும் பக்தர்களுக்கு மறுநாள் ஐயப்பனை தரிசிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பக்தர்கள் கோயிலின் வடக்கு வாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இதனால் காலையில் நடை திறக்கும்போது ஏற்படும் நெரிசல் குறையும்.
சபரிமலையில் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக தற்போது தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் கூப்பனை பயன்படுத்தி வரிசையில் நிற்காமல் மிக எளிதாக தரிசனம் செய்து வருகின்றனர். 3 மணி நேரம் மழை: சபரிமலையில் நேற்று 3 மணி நேரம் கனமழை பெய்தது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை மாலை 5 மணி வரை நீடித்தது. இதற்கு பிறகும் நீண்ட நேரம் மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. இதனால் இந்த சமயத்தில் வந்த பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர்.
வருகின்றனர். தற்போது தினமும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பகல் 1.30 மணிக்கு சாத்தப்படுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இரவு நடை சாத்தப்பட்ட பிறகு 18ம்படி ஏற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் வெகு தொலைவிலிருந்து வரும் பக்தர்கள் மிகுந்த சிரமப்படுவதுடன், மறுநாள் காலை நடை திறக்கும் வரை 18ம்படி முன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. இதுகுறித்து தேவசம் போர்டுக்கு புகார்கள் வந்தன.
காலையில் நடை திறக்கப்படும் போது கடும் நெரிசலும் ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக இரவில் நடை சாத்தப்பட்ட பிறகு வரும் பக்தர்களை 18ம் படி ஏற அனுமதிக்க தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இதன்படி இருமுடிக்கட்டுடன் வரும் பக்தர்களுக்கு மறுநாள் ஐயப்பனை தரிசிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பக்தர்கள் கோயிலின் வடக்கு வாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இதனால் காலையில் நடை திறக்கும்போது ஏற்படும் நெரிசல் குறையும்.
சபரிமலையில் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக தற்போது தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் கூப்பனை பயன்படுத்தி வரிசையில் நிற்காமல் மிக எளிதாக தரிசனம் செய்து வருகின்றனர். 3 மணி நேரம் மழை: சபரிமலையில் நேற்று 3 மணி நேரம் கனமழை பெய்தது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை மாலை 5 மணி வரை நீடித்தது. இதற்கு பிறகும் நீண்ட நேரம் மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. இதனால் இந்த சமயத்தில் வந்த பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர்.