காட்டுமன்னார்கோவில்
: ஆவணி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் திருமணம் நடத்தக்கூடாது என ஜோதிடர்
கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் நிறைந்த
பகுதி. இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதமே பெரும்பாலான திருமண
நிகழ்ச்சிகளை நடத்துவர். இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுவதாலும், ஆவணி
மாதம் 1ம் தேதியான இன்றும் இதே மாதம் 30ம் தேதியும் அமாவாசை வருவதாலும்,
இந்த மாதத்தில் திருமணம் செய்ய கூடாது என்று பஞ் சாங்கத்தில்
கூறப்பட்டுள்ளதால் திருமணங்கள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
திருமண நிகழ்ச்சிகள், விசேஷங்கள் இல்லாததால் பத்திரிக்கைகள் அச்சடிக்கும் பணியும் குறைந்துள்ளது. இதுபகுறித்து அச்சக உரிமையா ளர் காமராஜ் கூறியதாவது‘ ஆவணி மாதத்தில் திருமணம் நடைபெறுவதற்காக இதுவரை பத்திரிக்கைகள் அச்சடிக்கப்படவில்லை. இதற்கு இந்த மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதே காரணம் என கூறுகின்றனர்‘ என்றார்.
ஜவுளிகடை உரிமையாளர் ராஜா கூறுகையில்‘ ஆடி தள்ளுபடியிலும் அதிக ஜவுளி வியாபாரம் நடைபெறவில்லை. 2 அமாவாசை காரணமாக இந்த மாதமும் திருமணங்கள் குறைந்துள்ளதால் ஜவுளி விற்பனையும் முற்றிலும் குறைந்துள்ளது‘ என்றார். ஜோதிடர் சோழன் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதே போன்று ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். இதை மல ஆண்டு என்பர். பஞ்சாங்கத்திலேயே விவாக சுப முகூர்த்தங்கள் விலக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஆகாஷண சக்தி குறைந்து காணப்படுவதால் திருமணத்தை விலக்க வேண்டும் என்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சிகள், விசேஷங்கள் இல்லாததால் பத்திரிக்கைகள் அச்சடிக்கும் பணியும் குறைந்துள்ளது. இதுபகுறித்து அச்சக உரிமையா ளர் காமராஜ் கூறியதாவது‘ ஆவணி மாதத்தில் திருமணம் நடைபெறுவதற்காக இதுவரை பத்திரிக்கைகள் அச்சடிக்கப்படவில்லை. இதற்கு இந்த மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதே காரணம் என கூறுகின்றனர்‘ என்றார்.
ஜவுளிகடை உரிமையாளர் ராஜா கூறுகையில்‘ ஆடி தள்ளுபடியிலும் அதிக ஜவுளி வியாபாரம் நடைபெறவில்லை. 2 அமாவாசை காரணமாக இந்த மாதமும் திருமணங்கள் குறைந்துள்ளதால் ஜவுளி விற்பனையும் முற்றிலும் குறைந்துள்ளது‘ என்றார். ஜோதிடர் சோழன் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதே போன்று ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். இதை மல ஆண்டு என்பர். பஞ்சாங்கத்திலேயே விவாக சுப முகூர்த்தங்கள் விலக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஆகாஷண சக்தி குறைந்து காணப்படுவதால் திருமணத்தை விலக்க வேண்டும் என்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



