Pages

நவராத்திரி பிரம்மோற்சவம் : பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா


திருமலை: திருமலையில் நேற்று தொடங்கிய நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருமலை ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று காலை தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி தங்க பல்லக்கில் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில், நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி ஜீயர் சீடர்கள் உடன் வந்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பல வண்ண வேட மணிந்து நடனம் ஆடியபடியும், தப்பாட்டம், கோலாட்டம், பஜனை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்திற்கிடையில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அறங்காவலர் குழுத்தலைவர் பாபிராஜு, முதன்மை செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.