கும்பகோணத்திலிருந்து
3 கி.மீ. தொலைவில் உள்ளது கொரநாட்டு கருப்பூர். இங்குள்ள சுந்தரேஸ்வரர்
கோயிலில் பிராகாரத்தில் அஷ்ட நாகக் கன்னியருக்கு தனிச்சந்நதி உள்ளது.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பெட்டி
காளியம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு நாகக் கன்னியருக்கு பாலாபிஷேகம்
செய்தால் நாகதோஷம் முதலான சகல தோஷமும் விலகுகிறது.



