திருவனந்தபுரம்:
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15ம் தேதி
திறக்கப்பட்டது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் பக்தர்களின் கூட்டம்
குறைவாகவே இருந்தது. கடந்த 3 நாட்களாக சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
காணப்படுகிறது. சன்னிதானம், மாளிகைபுரம் ஆகிய இடங்களில் கால் வைக்க கூட
இடம் இல்லாத அளவுக்கு பக்தர்கள் குவிந்தனர். இதனால் பம்பையிலிருந்து
சன்னிதானம் செல்லும் வழியில் பல இடங்களில் போலீசார் கயிறு கட்டி பக்தர்களை
தடுத்து நிறுத்தி சிறு, சிறு குழுக்களாக அனுப்பி வைத்தனர். சன்னிதானத்தில்
இருந்து தரிசனம் முடிந்த பக்தர்கள், பம்பை திரும்ப தாமதமானதால்
பம்பையிலிருந்து சன்னிதானத் துக்கு பக்தர்களை அனுமதிக்க முடியாத நிலை
ஏற்பட்டது. இதனால் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று காலை வரை 12 மணி
நேரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் நடுக்காட்டில் தவித்தனர். சில இடங்களில்
பக்தர்கள் போலீஸ் தடுப்பு கயிறையும் மீறி ஓடினர். பக்தர்கள் வருகை
அதிகரித்ததை தொடர்ந்து பணி முடிந்து சென்ற 200 போலீசார் மீண்டும்
சபரிமலைக்கு