Pages

கோலமாமகரிஷி 2





சாமி புத்தகம் – கோலமாமகரிஷி 2
(பக்கம் 11-14)

அடுத்தவரிடம் கஷ்டத்தைக் கேட்கும்போது, கேட்பவருக்குக் கை, கால் குடைச்சல், வீட்டில் அமர்ந்து கேட்டால், கஷ்டமென்று சொல்வதை, அதிக கவனத்துடன் கேட்போம். “பையன் அப்படிச் செய்கிறான், இப்படிச் செய்கிறான்” என்பார்கள்.


அதற்குத் தகுந்த மாதிரி, இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால், இருவரும் எங்கே உட்கார்ந்து பேசினார்களோ, அங்கேதான் அமர்ந்து பேசுவார்கள்.


அங்கே உட்கார்ந்தவுடன் இந்த இராமாயணம்தான். சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்! என்பார்கள்.


ஆக, இந்த உணர்வுகள் அவர்களைக் கண்டவுடன் சாடிக்கொண்டே இருக்கும். அதற்கு உதவும். அதே சமயத்தில்,
காதிலும் கேட்போம். வீட்டிலும் பதிவு செய்துவிட்டோம்.
வீட்டிற்கு வந்தாலும் நிம்மதி இல்லை.
இரவில் கை கால் குடைச்சல், கண் எரிச்சல், தலைவலி எல்லாம் வந்துவிடும். டாக்டரிடம்தான் போக வேண்டும்.


இப்பொழுது, நாம் சந்தோஷமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். உடனே எழுந்து விடலாம். அடிக்கடி சங்கடமாக பேசிக் கொண்டிருந்தால், அங்கங்கே விஷம் தேங்கி நிற்கும். இந்த உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன், விஷம் அங்கேயே தேங்கிவிடும்.


ஆனால், கொஞ்ச நேரம் சலிப்பும், சங்கடமும், வேதனையும் எடுத்திருந்தால், நம் உடலில் மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் எல்லாம், இந்தப் பிராணவாயு, நாம் மூச்சு எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டுவரும்.


இந்த இடத்தில் தடைப்பட்டால், நரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் துடிக்க வேண்டும். இது போய் மோதியவுடன், அந்த இடத்தில் அசுத்தங்கள் எல்லாம் அப்படி, அப்படியே அடங்கிவிடும். அதுதான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி, முழங்கால் வலி, நடக்க முடியாமல் கூட வரும்.


நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ, அப்படி வலி வரும். கால் நீட்டி அமர்ந்திருந்தால், மடக்க முடியாது. மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது. அந்த விஷமான தன்மைகள் பலகீனப் படுத்தும். அங்கங்கே தேங்கி விடும்.


நாம் சுவாசித்த பிராணவாயு, அங்கங்கே போகும்போது, அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும். சுத்தப்படுத்துவதற்கு வழியில்லை.


நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆத்மசுத்தி செய்து வாருங்கள். நமக்குள் இருக்கக்கூடிய நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும்.


எத்தொழிலே முன்னேற்றம் அடைய முடியுமோ, அதை அடைய முடியும். நாளைய விஞ்ஞான அழிவுகளில் இருந்து வரக்கூடிய, சில விஷத்தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ள உதவும். இவ்வளவு சுலபமாகச் சொல்வதினால், நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.


ஆகையினாலே, நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து, வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானமிருங்கள்.


இறந்தவர்களுடைய உயிராத்மாக்களை, அந்த சப்தரிஷி மண்டலத்துடன் சேர்ந்து, அந்த உயிராத்மாக்கள் ஒளிசரீரம் பெற வேண்டுமென்று, விண் செலுத்துங்கள். இது அவசியம். இதைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும்.


அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கிறது. இந்த முறைப்படி இந்த தியானத்தைச் செய்து வாருங்கள். பௌர்ணமி தியானத்தில் எல்லாம், உங்களுக்கு அந்த சக்தியைக் கொடுக்கிறோம்.


உங்கள் புலனறிவுக்கு, விண்ணுக்குச் செல்லக்கூடிய அளவுக்கு, அந்த விண்ணுடன் தொடர்பு கொள்ள வைக்கிறோம். அதே சமயம், இந்த இறந்தவர்களின் உயிராத்மாவை, நீங்கள் எண்ணி, உந்தி அங்கே தள்ள வேண்டும்.


விஞ்ஞானி எப்படி இராக்கெட்டைச் செலுத்தி,
அதற்குள் மனிதனை அனுப்பி, இயந்திரத்தை வைத்து,
இங்கிருந்தே கம்ப்யூட்டர் அலைவரிசையைப் பார்க்கிறான்.
அங்கிருக்கக்கூடிய செய்தியை, ஆண்டனா வைத்து இழுக்கிறான்.


அதே மாதிரி, இறந்தவர்களை விண்செலுத்திவிட்டு, நம் ஆண்டனா, கண் இருக்கிறது. இந்த உணர்வைச் செலுத்தி, அங்கே ஏங்குங்கள். கேளுங்கள். நீங்கள் எடுங்கள்.


தெரிந்து எடுப்பதில்லை. தெரியாமலே நீங்கள் எடுக்கலாம். ரேடியோவில் அலைவரிசையைத் திருப்புவது போன்று, லேசாகக் கொடுக்கிறோம். நீங்கள் எடுத்துப் பழக வேண்டும், எமது அருளாசிகள்.
(பக்கம் 20-23)
எல்லோரும், வாரத்தில் ஒரு நாள் கூட்டு தியானம் செய்யுங்கள். கணவன் மனைவி இருவரும், ஒருநாளுக்கு ஐந்து தரமாவது ஆத்மசுத்தி செய்துவிட்டு, கணவனுக்கு அருள் சக்தி பெற வேண்டும். அவர் மூச்சும், பேச்சும் உலக அமைதி பெற உதவ வேண்டும்.


அவர் எத்தொழில் செய்தாலும், நலமும் வளமும் பெற வேண்டும். அவர் செயல் மற்றவர்களுக்கு நல்லதாக வேண்டும். அவரைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்துவிட்டு எண்ணுங்கள்.


இந்த உடல் சதமல்ல. நாம் எவ்வளவுதான் இருந்தாலும், இந்த உணர்வை நமக்குள் எடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடன் தொடர்பு கொண்டு பாசத்தால் பிணைத்துக் கொண்டால்தான், நாம் இந்த வழியிலே விண் செலுத்த முடியும்.


காசைக் கொடுத்து, “எங்கள் அப்பாவிற்கு சொர்க்கத்திலே இடம் வாங்கிக் கொடு” என்றால், யாரும் வாங்கித் தரமாட்டார்கள். நாம் அந்த உணர்வு கொண்டுதான், விண் செலுத்த முடியும். இல்லையென்றால் ஒன்றும் முடியாது. எதுவுமே செய்ய முடியாது. ஆனால், எடுத்துக் கொண்ட உணர்வுக்கு, நிச்சயம் பிறப்பு எடுத்தேதான் ஆக வேண்டும்.


ஆனால், இந்தச் சரீரத்தில் வேதனையை எடுத்தால், வேதனை கொண்ட உடல்தான் அடுத்து அமையும். இன்று சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு, அது நாயகனாக இருக்கும். அதெல்லாம் சந்தர்ப்பம்தான்.


கொங்கணவர், ஒரு ஏழையாக இருந்தாலும், ஒரு அரசனாக இருந்த பிருகுவின் உயிராத்மா இங்கு வந்து, ஒரு நிலை செய்யும்போது, வாசுகியின் (திருவள்ளுவரின் மனைவி) நல்வாக்குதான். இரண்டு பேருக்கும் மோட்சம் கிடைக்கின்றது.


இல்லையென்றால் இங்கே சூனியம்தான். இதைப் போன்ற சந்தர்ப்பம், வருகின்றது. இதைப்போல, உங்களுக்கு சிரமமென்ற நிலைகள் வரப்படும்போது, இது ஒரு சந்தர்ப்பம்.


இந்த சந்தர்ப்பமான நிலைகளில், உங்களுக்கு கொடுக்கும் உபதேசம் “மகரிஷிகளின் அருள் ஒளி”. மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்ட, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தேவை.


“அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்” என்று எண்ணிய நேரத்தில், ஞானியரின் அருள் உணர்வை உங்களுக்குள் செலுத்தி, துன்பப்படுத்தும் மனித உணர்வின் நிலைகளை அடக்கி, எண்ணத்தை வலுக்கூட்டி, உங்கள் செயல் தன்மையால் முன் செல்லுங்கள். இதைச் செய்வதற்குச் சந்தர்ப்பம் உண்டு.


ஆனால், அந்த சந்தர்ப்பத்தைக் கூட்டிக் கொண்டால் உங்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வை இயக்கிக் காட்டுவது, உங்கள் உயிரான ஈசன்தான்.


நீங்கள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துதான், உணர்வை ஒளியாக மாற்றுவது, உடலைக் கொடுப்பது எல்லாமே.


நாம் எதை எண்ணினாலும், இந்தச் சுவாசத்தை நாம் எடுக்கும்போது, உயிரான நிலை, பிரம்மமாகிவிடுகின்றது. நாம் சங்கடமோ, சலிப்போ, அழிப்பேன், எடுப்பேன், என்ற உணர்வை எடுத்தாலும், இந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து, உயிரான ஒளியாக மாற்றி, அடுத்த நிலைகளுக்கு ஆளாக்கிவிடுகின்றது. எதிலிருந்தும் நாம் தப்ப முடியாது.


ஆக நாம் எடுத்துக் கொண்டது உயிராக நின்றிருக்க, பிரம்மமாக நின்று சிருஷ்டித்துக் கொடிருக்கும், நமக்குள் அவனைப்பற்றி அந்த மகரிஷிகளின் அருளால், அவனுக்கு எடுக்க வேண்டியது எவையாக இருக்க வேண்டும்?
அனைத்தும் நல்லதாக வேண்டும்.
எல்லோரும் நலம்பெற வேண்டும்.
வாழ்க்கையில் உயர்வு பெறவேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
நீங்கள் சுவாசிக்கும்போது,
உங்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றான்.
உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பத்தைத் துடைக்கிறான்.
வழியறியும் உணர்வை, உங்களுக்குள் ஒளியாக மாற்றுகின்றான்.


அவனுடன் (உயிருடன்) செல்லப்படும்போது, எந்த ஒளியின் தொடர்கொண்டு வழிகாட்டினானோ, அங்கே செல்கின்றோம்.
(பக்கம் 26-30)
எல்லோரும், கொங்கணவ மாமகரிஷி போல “மனதைத் தங்கமாக்கும் நிலை” பெறவேண்டும். ஆகையினாலே, அவருடைய அலைகள்தான் உங்களுக்குள் இன்று இந்நேரம் செயல்படுத்துவது.


பிருகு மகரிஷி, ஏழ்மையின் உடலான கொங்கணவர் உடலில் சென்று, வாசுகி அம்மையாலே எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை கொண்டு, மனதைத் தங்கமாக்கும் அந்தச் சந்தர்ப்பத்தினுடைய நிலைகளைப் பெற்றது போன்று, இன்று இதைக் கேட்போருக்கும், அந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.


இந்த சந்தர்ப்பத்திலே உணர்வினுடைய நிலைகள்,
உங்கள் மனது தெளிவாகி,
தங்கம் எப்படி, என்றுமே பளிச்சிடச் செய்கின்றதோ,
அதைப்போல உங்கள் மனதின் எண்ணங்களும் பளிச்சிட்டு,
வாழ்க்கை தங்கத்தைப் போன்று வலுக்கொண்டதாகவும்
செயலினுடைய தன்மை இனிமை கொண்டதாகவும்,
உங்கள் பார்வையினுடைய தன்மை பிறருக்கு இனிமையாகவும்,
தங்கம் எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப்போல
உங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டுமென்று
யாம் பிரார்த்திக்கிறோம்.


நினைவு அனைத்தையும் புருவ மத்தியில் செலுத்தி, அதன்வழி பெற தியானியுங்கள். அருள்ஞானச் சக்கரத்தில் பாருங்கள். அதில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வரும்.


நீங்கள் என்னென்ன காரியங்கள் நினைக்கிறீர்களோ, அவை நல்லதாக ஆக வேண்டுமென்று எண்ணுங்கள். குடும்பம் நலமாக வேண்டுமென்று எண்ணுங்கள். விவசாயம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுங்கள். தொழில் பெருக வேண்டுமென்று எண்ணுங்கள்.


நோயாளி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று, நோய் நீங்கி, உடல் நலம் பெற வேண்டுமென்று எண்ணுங்கள். அந்தச் சக்கரத்தின்முன், நீங்கள் ரொம்ப பயபக்தியோடு பால், பழம் வைத்து, தியானம் செய்துவிட்டு, குழந்தைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் உடல் நலமாக வேண்டுமென்று எண்ணிச் சாப்பிடுங்கள். இதே வழியில் கடைபிடித்து வாருங்கள்.


எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் உணர்வுகள், ஊர் முழுவதும் படர வேண்டும்.
இந்த ஊரிலுள்ள குடும்பம் எல்லாம், ஒன்றுபட்டு வாழ வேண்டும்.
அவர்கள் விவசாயம் எல்லாம், செழித்து வளர வேண்டும்.
அவர்களெல்லாம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று,
சக்கரத்தின் முன் அமர்ந்து சொல்லிக் கொண்டே வாருங்கள்.


அதன்வழி, உங்கள் தெருவில் உள்ள எல்லோருக்கும், அந்த அருள் உணர்வுகள் படரும். அந்தந்தக் குடும்பங்களில் நலமாகும் சக்தி பெருகும். இந்த உணர்வுகள் இப்படிப் படர படர, அங்கே எல்லோருக்கும் கிடைக்கும்.


T.V. ஸ்டேஷனில் எந்த ஒளிபரப்பைப் பண்ணுகிறார்களோ, அந்த அலைவரிசையில்தான் வரும். நாமும் இந்த உடலில் எடுத்து, இந்த மகரிஷிகளின் அலைவரிசையில், அவர்களை எண்ணிச் சொல்லியிருப்போம்.


அவர்கள் ஞாபகம் வந்து, அந்த அலைவரிசையை எடுத்தார்கள் என்றால், அவர்களும் அறிய முடிகின்றது. அவர்களை அறியாத கஷ்டங்களையும் போக்க வேண்டும்.
இந்த மாதிரி, நம் தியானவழி அன்பர்களெல்லாம் உலகம் நலம் பெறுவதற்காகத் தியானம் செய்தீர்கள் என்றால், எல்லோருடைய எண்ணங்களும் நல்லாகும் போது, நமக்குள் அருள் மகரிஷியின் உணர்வை, எளிதில் பெற முடிகிறது.


ஒவ்வொரு குடும்பத்திலும் கூட்டு தியானம் இருந்து, அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும், என்று ஏங்கி தியானியுங்கள்.


யாருடைய குழந்தைக்காவது நோய் இருந்தால், கூட்டுத் தியானங்கள் இருந்து, மகரிஷிகளின் அருள்சக்தி அந்தக் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும். நோய் நீங்க வேண்டுமென்று சொல்லுங்கள். கூடுமான வரையிலும் நோய்கள் நீங்கி, சீக்கிரம் நலம்பெறும்.
என்னதான் நோய்கள் நீங்கினாலும்,
இன்னும் கொஞ்ச நாள்தான் இந்த உடலில் வாழ்கிறோம்.
எப்படியும் இந்த உடல் அழிந்துதான் ஆக வேண்டும்.
இந்த உடல் உங்களுக்கு சொந்தமல்ல.
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?


எல்லோரும் நன்றாக இருக்கவேண்டுமென்று, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும், இந்த உணர்வுகளைச் செலுத்தும்போது, மகரிஷிகளின் அருள் உணர்வை, நமக்குச் சொந்தமாக்கி விடுகிறோம்.


உணர்வுகள் நோய்வாய்ப்பட்டால் உடல் சுருங்கத்தான் செய்யும். ஆகவே, அருளைப் பெற்றபின், தீய உணர்வுகள், தீய அணுக்கள் குறையப்படும்போது, உடல் சுருங்கத்தான் செய்யும்.


ஆனால், அந்தப் பேரருள் கொண்ட உணர்வுகள்
அந்த உடலிலே ஒன்று சேர்ந்து இணைந்தபின்,
அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கவர்ந்து,
அந்த உணர்வாக உணவாக எடுத்து,
ஒளியின் பிழம்பாக மாறும்.
அப்பொழுது நாம் பிறவியில்லா நிலை அடைகிறோம்.
இராமாயணத்தில், இராமன் “நேரமாகி விட்டது” என்று மணலைக்கூட்டி, (மனதைக் கூட்டி) தியானிக்க ஆரம்பித்துவிடுகிறான்.


இதைப்போலத்தான், நம் தியானம் அனைத்தும் நம் எண்ணங்களெல்லாம் ஒன்று சேர்ந்து, பகைமையில்லா உணர்வுகளை நமக்குள் வளர்த்து, ஏகாந்த நிலையை அடைய வேண்டும்.


அவ்வாறு வளர்த்து, நம் உயிருடன் ஒன்றி, இந்த உடலிலிருக்கும்போதே, அந்த ஒளியின் உணர்வைச் சேர்த்து, ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். இதுதான் கடைசி நிலை.
(பக்கம் 35-38)
அன்றைய அரசர்கள் செய்தது போலத்தான், இன்றைய விஞ்ஞானிகள், ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் வளர்த்து, வளர்த்து, அது காற்றில் கலந்து, மீண்டும் விஞ்ஞானத்திற்கு வருகின்றது.


அன்று மெய் ஞானிகள் சொன்னது அனைத்தும், மனித உடலிலிருந்து எடுத்தார்கள். இன்று மனித உடலிலுள்ள உணர்வுகள் எதில் எதிலே கலந்திருந்ததோ, அதைக் கெமிக்கல் கலந்து அறிந்தான்.


உலோகத்தன்மையை வைத்து, மந்திரத்தினால், ஒருவன் சொல்லக்கூடிய எண்ணத்தை அறிந்தான். அதே சமயம் பூமிக்குள் இருக்கக்கூடிய நிலையை அறிந்தான்.


பூமிக்குள் ஆழமாக இருக்கக்கூடிய, கல்லை அறிந்தான். பூமிக்குள் இருக்கக்கூடிய மண்ணை அறிந்தான். பூமிக்குள் இருக்கக்கூடிய பாஷாணத்தை அறிந்தான். அதிலிருக்கக்கூடிய உலோகத்தைப் பக்குவப்படுத்தினான்.


இவன் உடலுக்குள் இருப்பது இருநிலைகள் வரப்படும் பொழுது, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஏழு, என்கிற பொழுது, அது கடினமாகின்றது. அதற்குள் மறைந்த நுண்ணிய அலைகள் தெரிகிறது. அப்பொழுது, உலோகத்தை அறியும் தன்மை வருகிறது.


இப்படி, உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது, உலோகத்தை ஆயுதமாக வைத்து, இந்த மந்திரத்தை வைத்து, சில நிலைகளைச் செயல்படுத்துகிறான். உலோகத்தின் தன்மை வரப்படும் பொழுது, வெடிக்கும் தன்மை வருகின்றது.


இந்த உலோகத்தின் தன்மை, வெடிக்கும் தன்மை வந்தவுடன், மந்திரங்களெல்லாம் அடிப்பட்டுவிட்டது. மந்திரமெல்லாம் நிற்காது. “டம், டம்”, என்று மந்திரம் சொல்லும்முன், போட்டு அடித்துவிடுகின்றான். எந்திரங்களுக்குப் பவர் வந்தது. இன்று எந்திரங்களுக்கு முன் மந்திரம் நிற்காது.


மந்திரத்தைப் போல இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டது. இந்தக் கம்ப்யூட்டர் வந்தபின், நாம் பேய், அது, இது, என்று சொன்னதை, இன்று நாம் T.V. யில் பேயைப் பார்க்கிறோம்.


நம் கண்ணின் நிலைகளில் அன்று பேயைப் பார்த்தோம். இன்று, உருவத்தின் நிலைகளைப் பேய்களைக் கண்ணில் பார்க்கிறோம். இதைப் போன்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, கெமிக்கல் கலந்து இருப்பதனால், இந்தப் பேயின் உருவத்தை இன்று படம் எடுக்க முடியும். சொல்வது அரத்தமாகிறதல்லவா.


விஞ்ஞானம் உருவாகும் பொழுது,
கெமிக்கல் கலந்தபின் தான்,
அதன் நிலையை அறிகின்றோம்.
இன்று சிறுநீருக்குள், ஒவ்வொரு உணர்வின் தன்மை எது எது கலந்திருக்கிறது என்பதை, கெமிக்கல் வந்தவுடன், அதன் கலர்கள் மாறுகின்றது.


இதைப் போலத்தான், இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, மனித உணர்வுக்குள் வரப்படும் பொழுது, இன்று ஆவியை நாம் படம் பிடிக்க முடியும். முந்தைய நாட்களில் படம் பிடிக்க முடியாது.


இவனின் இரசாயணத்தன்மையுடைய நிலைகள்
நமக்குள் கலந்து கலந்து,
மனித உணர்வுக்குள் வந்தபின்,
அதில் சிக்கியதுதான் “எதிர்பாராத கண்டுபிடிப்புகள்”.


இவையெல்லாம் கண்டுபிடித்து, இன்று “கம்ப்யூட்டராக” வந்தது. இன்று இயந்திரத்தின் துணை கொண்டு மனிதனையே உருக்குலைக்கும் நிலை வந்துவிட்டது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


(பக்கம் 44-48)
நமது குருநாதர் எம்மைப் பல முறைகளில், பல சிக்கல்களையும், பல தொல்லைகளையும் கொடுத்தபின், “யாருக்குச் செய்தாலும், அவர்களுக்கு நல்லது செய்துவிட்டு, அவர்களிடம் நல்ல வாக்கை வாங்கு” என்றார்.


உங்களையறியாமல், உங்கள் வாழ்க்கையில் என்னென்ன ஆசைப் படுகிறீர்கள்? நல்லதுதான் செய்கிறோம் என்று சொன்னாலும் கூட, துன்பத்தை விளைய வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே துன்பம் வந்து சேர்ந்தால், நல்லது உள்ளே போய்விடும்.


பாலை, பாதுகாப்பாக நன்றாகக் காய்ச்சி வைத்திருப்போம்.
ஒரு துளி விஷம் கலந்துவிட்டால்,
தெரியாமல் சாப்பிட்டால் இறந்துவிடுவோம்.
இதைப் போல, நமக்குத் தெரிந்து, கெட்டதாக ஆவதல்ல. ஆனால், கெட்டது அனைத்துமே நம்மை இயக்குகின்றது.


சூரியனும் விஷத்திலேதான் சிக்கியிருக்கிறது.
ஒரு அணுவும் விஷத்தில்தான் இருக்கின்றது.
யாம் இப்பொழுது பேசுவதும் விஷம்தான்.
எம்மை இப்பொழுது பேசத் தூண்டுவதும் விஷம்தான்.
அந்த உணர்ச்சி இல்லையென்றால், உங்களிடம் வராது.


இந்த விஷமே, உங்களிடம் தாக்கவில்லை என்றால், உணர்ச்சியைத் தூண்டவே செய்யாது. விஷம் இல்லாத மண் மாதிரி இருக்கும்.


தேவாங்கைப் போன்று, விஷம் கம்மியாக ஒன்றும் செய்யாது, அமைதியாக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும், ஒன்றுமே செய்யாது. ஆற்றலே இருக்காது அமைதியாகவே இருக்கும். அது மாதிரி, யார் உடலில் விஷம் கம்மியாக இருக்கின்றதோ, இந்த மாதிரி மந்தமாக இருப்பார்கள். அவர்களிடம் எந்த மாற்றமும் இருக்காது.


சாதாரணமாக விஷம் கம்மியாக இருப்பவர் ஒருவரிடம், ஒரு வேலையைச் சொன்னால், “இது எதற்கு, அது எதற்கு? என்று சொல்லிக் கொண்டிருப்பார்.


இன்னொருவர் இந்த விஷம் கொஞ்சம் இருந்தால், துடி துடிப்பார். “பைத்தியக்காரத்தனமாக, இவன் உட்கார்ந்து கொண்டே சாப்பிடுகிறானே” என்பார்.


சோம்பேறித்தனமானவர் "இவன் என்னடா, இப்படிப் பறந்து கொண்டிருக்கின்றான்?” என்பார். இவருடைய உணர்வுக்கு, இதைச் சொல்வார்.


இவனைப் பற்றி அவர் சொல்வார். ‘சும்மாவே இருந்து கொண்டு சாப்பிடுகிறானே” என்று இவருடைய வேகம் பேசும். “இவன் சோம்பேறிப்பயல்” என்பார். இவனுடைய உணர்வின் வேகம் இவ்வாறு சொல்லும்.


அவன் உணர்வு, “இவன் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறான்? என்று இருக்கும்.


இவை இரண்டும் எதிர்மறை. ஆக, இந்த உணர்வுகள் வேலை செய்யும். ஆக, அந்தந்த உணர்வின் தன்மை செயல்படுவது போல, விஷத்தின் தன்மை நாம் பேசுவதிலும் உண்டு.


உலகமே விஷத்திற்குள் கவர்ந்ததுதான். மிளகாய்க்குள் காரமிருக்கிறது. அளவாகக் குழம்பில் போட்டால், குழம்பு ருசியாக இருக்கும். அதிகமாகப் போட்டால் என்னவாகும்?


இதே மாதிரிதான், விஷத்தின் அளவு எது எதிலே கூடியிருக்கின்றதோ, அந்த உணர்வுக்குத் தக்கவாறு, அந்த உணரச்சியைத் தூண்டச் செய்வதும், அதற்குள் எந்த அளவுக்கு விஷம் இருக்கின்றதோ, அந்த அளவுக்குத் தக்கவாறுதான், சொல்லின் ஆற்றலும் வரும்.


ஆக, ரோஜாப் பூவிற்குள்ளும் விஷம் உண்டு. நல்ல நறுமணத்தை
வேகமான நிலைகளில் கொண்டு செல்ல விஷம் தேவை.
விஷம் இல்லை என்றால்,
ரோஜாப் பூவிற்கு வேலை இல்லை. மணம் இருக்காது.


ஆனால், அதிகமாக மணம் சேர்ந்துவிட்டாலோ, அதிக வாசனையை நுகர்ந்து பாருங்கள். தலைவலி வந்துவிடும். இந்த விஷத்தின் தன்மை வேலை செய்யும். அதிகமான மணத்தைக் கூட்டிவிட்டால், மயக்கம் வந்துவிடும்.


சிலருக்குப் பலவீனமான எண்ணம் இருக்கும். மணம் பிடிக்காது. ஆக, இவர்கள் உடலில் இருக்கக்கூடியது, அந்த விஷத்தை ஏற்றுக் கொள்ளாத தன்மை.


மற்ற உடலிலிருந்து, விஷமான தன்மை வந்தால், ரோஜாப்பூ மணத்தை ஏற்றுக் கொள்ளாத நிலை வந்தால், வாழ்க்கையில் எப்பொழுது பார்த்தாலும் விரக்தியாக இருக்கும். “என்ன வாழ்க்கை, என்ன இது?” என்ன இது? என்று சோர்ந்து சோர்ந்து, அந்த உணர்வை எடுத்திருப்பார்கள்.


அவர்களிடம் நல்ல வாசனை ஏதாவது இருந்தால், அதற்குள் இருக்கும் விஷம் தூண்டும். அதில் பட்டவுடன், இவர்களுக்குத் தலைவலி வரும். மயக்கம் வரும் எங்கேயோ ஓடிப் போய்விடுவோம் என்ற எண்ணம் வரும்.


இந்த நல்ல வாசனைக்குள் உள்ள விஷம். இந்த மணத்தை இங்கே சகிக்க விடாதபடி, தனக்குள் தூண்டியவுடன், உடனே மயக்கம் வரும். சோர்வடையச் செய்யும். அங்கே உட்காரவிடாது. எல்லாம் வந்துவிடும். ஏனென்றால், இதைப் போன்று ஒன்றுக்கொன்று, இந்த உணர்வின் ஆற்றல்கள் உண்டு.