Pages

அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் இரகசியங்கள்


1 அகஸ்தியன் எப்படி உருவானான்?
பல லட்சம் ஆண்டுகளுக்குமுன், அதாவது காட்டு மனிதர்களாக வாழ்ந்து வந்த புலஸ்தியர்கள், பல மிருகங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், விஷச் ஜந்துக்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், அதாவது பாம்பு, பல விஷக் கிருமிகள் இது போன்ற நிலைகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, அதற்கு எதிர் நிலையான பச்சிலையை அரைத்து, தன் உடல்களில் பூசிக் கொள்வார்கள்.


அவ்வாறு பூசிக் கொண்டால், அதனின் மணத்தைக் கண்டு, அவர் அருகிலே அந்த விஷப் பிராணிகள் வருவதில்லை. இதைப் போன்ற புலி போன்ற மிருகமோ, யானை போன்ற மிருகங்களோ, இவர்கள் அருகில் வராதபடி, அந்தந்தக் காலங்களில், அவர்கள் உடல்களில், இந்தப் பச்சிலைகளை அரைத்துப் பூசிக் கொள்வார்கள்.


அவ்வாறு பூசிக் கொண்டால், அவர்களிடமிருந்து வெளிப்படும் இம் மணத்தை, சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து, அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கும்.


ஆனால், மற்ற உயிரினங்கள், நுகர்ந்தறிந்தே இரை தேட வரும். அப்பொழுது அவர்கள் உடல்களில் பூசியுள்ள பச்சிலையின் வாசனை வெளிவரும்பொழுது, அந்த மணத்தைக் கண்டு அஞ்சி, மற்ற பூச்சிகளோ, யானைகளோ, புலிகளோ, இவர் அருகில் வராதபடி, விலகிச் செல்லும்.


ஆகவே, தனது பாதுகாப்புக்காக தங்களின் உடலில், அவர்கள் பூசிக் கொண்ட அந்த பச்சிலையின் மணங்களை நுகர நேர்கின்றது, அவர்களும் நுகரப்படும் பொழுது, அவர் உடல்களிலேயும், சில விஷத்தன்மையான கிருமிகளை, அவர்கள் அழித்திடும் சக்தியைப் பெறுகின்றார்கள்.


இதன் வழிகளில், அவர்களது வாழ்க்கையில் காலை எழுந்தபின், சூரியனின் உதயத்தைக் கண்டு, கடவுள் நம்மைக் காக்க வருகிறார் என்று,
சூரியனை உற்றுப் பார்த்து, அவர்கள் வழிபடுவது வழக்கம்.
அவ்வாறு, சூரியனை உற்றுப் பார்த்து அவர்கள் வழிபடும் பொழுது,
சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மைகளை
இவர்கள் பார்த்தாலும், இவர்களைப் பாதிப்பதில்லை.


சூரியனின் இயக்கமும், சூரியன் வெளிப்படுத்தும் அந்தச் சக்தியினை, தான் நுகரும் வாயிலில், எதிர்நிலை கொண்டு, அது விஷத்தை எவ்வாறு பிரிக்கின்றது என்ற நிலையும், அவர்கள் உணர்கின்றார்கள்.


இவ்வாறு தங்களது வாழ்க்கையில் உணர்ந்தறிந்து, சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்து, தீமை கொண்ட மற்ற உயிரினங்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு, பல உபாயங்கள் தோன்றிக் கொண்டே உள்ளது.


இதன்படி, அவர்கள் கற்றுணர்ந்த உணர்வுகளை, அக்காலங்களில், தங்கள் அருகிலே வாழும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், அந்தக் கால மக்கள் இவர்கள் எடுத்துச் சொல்வதை, அவர்கள் உடல்களிலே பதிவாக்குகின்றனர்.


இவர்கள் சொல்லிக்கொண்டிருப்பது அனைத்தையும், சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து, அலைகளாக மாற்றிக் கொண்டிருப்பதும், இவ்வாறு மாற்றிக் கொண்டிருந்த அச்சக்திகள், இன்றும், நாம், நம் குரு காட்டிய அருள்வழியில், அக்காலங்களில் எவர் பெற்றார்கள் என்ற நிலையை, நாமும் உணர முடியும்.


இவ்வாறு எப்படியெல்லாம் இந்த சக்திகள், அது வெளிப்படுகின்றது, அதை, சூரியனின் காந்த சக்தி எவ்வாறு கவர்ந்து கொண்டிருக்கின்றது என்பதனை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், அத்தகைய விஷத்தை முறித்திடும் உணர்வின் சத்தை, எம்மை நுகரச் செய்து, அக்கால மக்களின் உருவங்களையும், அக்காட்டுப் பகுதியின் நிலைகளையும், என்னை அறியும்படி செய்கின்றார்.


அவர்கள் வெளிப்படுத்திய உணர்வின் சத்துக்கள், எவ்வாறு இப்பூமியில் பரவிக் கொண்டுள்ளது? சாமான்ய மக்களும் அதைப் பெற முடியும் என்பதனை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக உபதேசித்து, அதனை என் உடலிலே பதிவாக்குகின்றார்.
இவ்வாறு எமக்குள் பதிவான நிலை கொண்டுதான்,
இன்றும் எம் குருநாதர் பேசிய உணர்வின் தன்மையும்,
உபதேசித்த உணர்வும், இன்றும்
அதாவது, உணர்வுகளாகப் பரவிக் கொண்டுள்ளது.


அதனை நீங்கள் அனைவரும் நுகர்ந்தறிந்து, உங்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.




அவ்வாறு, அவர்கள் பூசிக் கொண்ட பச்சிலைகளின் மணங்களையும், நஞ்சினை வென்றிடும் அந்தச் சக்திகளையும் நீங்கள் அனைவரும் பெற்று, அவர்கள் நஞ்சினை வென்றது போன்று, நீங்களும் வெல்வதற்கே இதை யாம் உபதேசிக்கின்றோம்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் என்று சொல்லும், அவர்கள் கருவுற்றிருக்கும் பொழுது, இவர்கள் பூசிய முலாம்கள் விஷத்தை அடக்கிடும், விஷத்தை வென்றிடும் அத்தகைய பச்சிலையின் வாசனைகளை அவர்கள் சுவாசிக்கும் பொழுது, அவர்கள் கருவில் வளரும் சிசுவிற்கும் இது இணைகின்றது.


ஆகவே கருவுற்ற காலங்களிலிருந்து,
அந்த 10 மாதங்களில், இவர்கள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சக்திகளையும்,
ஒவ்வொரு ஆற்றல்களையும் அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதும், அந்த உணர்வுகள், கருவிலே வளரும் இந்த சிசுவிற்கு, பதிவாகிக் கொண்டே இருக்கின்றது.


இவர்கள், காலையில் சூரியன் உதயமாகும் பொழுது, சூரியனை உற்றுப் பார்த்து, கடவுள் என்ற நிலைகளில்,
அவர்கள் வணங்கி வந்ததும், அதன் உணர்வை நுகர்ந்ததும்,
சூரியன் கவரும் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் சக்தியும்,
மற்ற கோள்கள் எவ்வாறு கவர்கின்றது என்ற நிலையும்,
இவர்கள் நுகர்கின்றார்கள்.
அந்த உணர்வுகள், கருவிலே வளரும் சிசுவிற்கும் பதிவாகின்றது.


அவ்வாறு 10 மாதங்களில், அந்தக் கருவில் இருந்து வெளிப்பட்ட இந்தச் சக்திதான், குழந்தையாக அது பிறந்தபின், அவன் உடலிலிருந்து வெளிப்படும் மணத்தைக் கண்டு, மற்ற பாம்பினங்களோ, கொசு போன்ற விஷ ஜந்துக்களோ, மற்ற மிருகங்களோ, இவன் இருக்கும் பக்கம் வருவதில்லை. இந்த மணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.


அதைக் கண்ணுற்ற, அந்த அகஸ்தியன் என்று பின்கூறும், அவனது தாய் தந்தையர்கள் “அகஸ்தியனைக்” கடவுளால் கொடுக்கப்பட்ட குழந்தை என்று, அதை இவர்கள் போற்றித் துதிக்கும்நிலை வருகின்றது.