
நம் வீட்டின் அருகாமையில் உள்ள கோவிலிëல் நவகிரகங்களுக்கு என தனி சந்நிதி அமைந்திருக்கும். திருக்கோவில்களுக்குச் செல்வோர் மற்ற தெய்வங்கள் திருமேனிகளை வழிபடுவதோடு ஈஸ்வரன் கோவில் என்றால் 5 சுற்றுகளும், முருகன் கோவில் என்றால் 6 சுற்றும் அம்மன் கோவில் என்றால் 3 சுற்றும் வலம் வந்து வணங்க வேண்டும்.
நவக்கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்போர், கோளாறு பதிகம் படித்தும், சிவாலயத்தில் முருகன் கோவில் என்றால் முருகன் பாடலையும் சனிதோஷம் என்றால் இப்புத்தகத்தில் உள்ள பாடலையும் பாடி சற்று அமர்ந்து மூலவரை மனஉருகி வேண்டியபின் நவகிரக வழிபாடு செய்யவும் இப்புத்தகத்தில் 49-ம் பக்கத்தில் உள்ள நவகிரக ஸ்தோத்திரத்தை பாடலாம். முக்கியமாக நவகிரகத்தை 9 முறை வலம் வரவேண்டும்.


