skip to main |
skip to sidebar

"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே" ("suklaambharadharam vishnum sasivarnam
chathurpujam prasannavathanam dhyayeth sarva viknobha saanthaye")
கொஞ்சமேனும் இறை நம்பிக்கை உடையவர்களில் பெரும்பாலோனோருக்கு இந்த சுலோகம்
தெரிந்திருக்கும். குறைந்தது கேட்டாவது இருப்பார்கள். வடமொழியில் நடக்கும்
எல்லா வழிபாடுகளும் இந்த சுலோகத்தைச் சொல்லியே தொடங்குகின்றன. இதன்
விளக்கம் ************** சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் =
வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத +
அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற
ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை). விஷ்ணும் - எங்கும்
நிறைந்திருப்பவர் சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர் சதுர்புஜம்
-..