கோவையை
அடுத்துள்ள புகழ் பெற்ற மருதமலையில் அமைந்துள்ளது பாம்பாட்டி சித்தர்
வாழ்ந்த குகை கோயில். தனது வாழ்வியல் காலத்தில் மருத்துவ மூலிகைகள் நிறைந்த
மருதமலையில் குடிகொண்டு வெகு காலம் வழிபாடு செய்து வந்தார் .சுமார் 200
வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் பாம்பாட்டி சித்தர் இன்று நாம்
வழிபாடும் குகை கோயிலில் உள்ள சுரங்கம் மூலமாக சென்று ஆதிமுலஸ்தானம் சென்று
மருதமலை முருகனை பெருமானை வழிபாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சுயம்புவாக ஸர்ப்ப வடிவத்தில் அமைந்துள்ள கற்சிலையும் நந்திகேஸ்வரருடன்
கூடிய சிவலிங்க பார்வதி சமேத பாம்பாட்டி சித்தர் எழுந்தரிளியுள்ள தெய்வீக
சந்நிதியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்ய சித்தர்பெருமானின்
பரிபூர்ண ஆசீர்வாதம் கிடைப்பதை உணரலாம் . அமாவாசை பௌர்ணமி ஆகிய நாட்கள்
இவருக்கு...