'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவர்உயர்ச்சி தாளாண்மை -
தேனின்கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து
போம்'- நல்வழி, 26வது செய்யுள்
இதன் பொருள் 'பசியென்று
வந்துவிட்டால் மானம், உயர்குலம், கல்வி, வலிமை, அறிவுடைமை, ஈகை, தவம்,
உயர்வு, முயற்சி, தேனின் கசிவு போன்ற சொல்லுடைய நற்குலப் பெண்களைத்
காதலித்தல் போன்ற பத்து பண்புகளையும் பறந்து போகச் செய்து விடும்' என்பதே
ஆகும்.