Pages

திருச்சானூர் கோயிலில் இன்று பிரம்மோற்சவம்


திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் 18ம்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று காலை லட்ச குங்கும அர்ச்சனையும், மாலையில் அங்குரார்ப்பணமும் நடக்கிறது. பிரம்மோற்சவ முதல்நாளான இன்று காலை கொடியேற்றப்படுகிறது. இரவு 8 மணியளவில் சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் மாடவீதிகளில் உலா வருகிறார். 2ம் நாள் காலை பெரிய சேஷ வாகனம், இரவு அம்ச வாகனத்திலும், 3வது நாள் காலை முத்துபந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், 4வது நாள் காலை கல்பவிருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும், 5 வது நாள் காலை பல்லக்கு உற்சவமும், இரவு கஜ வாகனத்திலும், 6 வது நாள் காலை சர்வ பூபால வாகனத்திலும், இரவு கருட வாகனத்திலும், 7வது நாள் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும், 8 வது நாள் காலை ரதோற்சவமும், இரவு குதிரை வாகனத்திலும் பத்மாவதி தாயார் மாட வீதி உலா வருகிறார். 9வது நாள் காலை பஞ்சமி தீர்த்தம் (சக்கரஸ்நானம்), மாலை கொடியிறக்கத்துடன் முடிவடைகிறது.