Pages

பூலோகம் வந்த பாதாள நாகக் கன்னியர்


பாதாள லோகத்தில் வாசம் செய்த நாகக் கன்னிகைகள் பூலோகம் சென்றுவர, நாகராஜனிடம் அனுமதி கேட்டனர். சூரியன் மறைவதற்குள் திரும்ப வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் பூலோகத்திற்கு

வந்தனர். வெள்ளியங்கிரி மலையடிவாரத்தின் அழகில் மனதை பறிகொடுத்த அவர்கள் சூரியன் மறைவதை கவனிக்கவில்லை. வாக்கு தவறியதால் பாதாள லோகத்திற்கு திரும்ப முடியவில்லை.

நாகராஜனின் சாபத்திற்கு ஆளானார்கள். அங்கிருந்த நதிக்கரையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். சில நாட்களில் சிவபெருமான் அவர்களுக்கு காட்சியளித்து சாப

விமோசனம் அருளினார். அதற்கு பின்னரே நாகக் கன்னிகைகள் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றனர். இந்த அற்புத சம்பவம் நிகழ்ந்த நாகேஸ்வரன் திருக்கோயில், கோவை-பூண்டி சாலையில்

கோட்டைக்காடு என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.