கேரளம்,
திருவனந்தபுரத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள திருவல்லம் பரசுராமர்
ஆலய சுற்றுப் பிராகாரத்தில் வடக்கு மூலையில், ஒரு மேடையின் மீது பலவித
வண்ணங்களில் ஏராளமான சோப்புப் பெட்டிகள் கயிற்றில் கட்டித்
தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒரு தகடு இருக்கும். இதன்
அருகே ஓடும் கரமனையாற்றின் கரையில், அகால மரணமடைந்தவர்களுக்கு 13 மாதங்கள்
தில ஹோமம் செய்து 13வது மாதம் அந்த சோப்புப் பெட்டியை பரசுராமரின்
பாதங்களில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். பரசுராமர், தன் தாய்க்கு
பலி தர்ப்பணம் கொடுத்ததாக கூறப்படும் தலம் இந்தத் திருவல்லம். இங்கு
அமாவாசை நாட்களில் ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் செய்ய கூடுகின்றனர்.
அமாவாசை நாளன்று நடுநிசியில் நடக்கும் ஹோமங்களில் மிளகாய், சுக்கு, வசம்பு
போடப்படுகிறது.



