Pages

கவலை போக்கும் ஈச்சனாரி விநாயகர்


கோவையில் ‘ஈச்சனாரி விநாயகர்’ என்னும் திருநாமத்தோடு பக்தர்கள் குறைதீர்க்கும் அருள்நிதியாக எழுந்தருளி யுள்ளார். மேற்கு சிதம்பரம் என்று போற்றப் படும் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயி லில் பிரதிஷ்டை செய்வதற்காக 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகத்தை மதுரையில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் ஈச்சனாரி எனும் பகுதியில் வந்தபோது வண்டியின் அச்சுமுறிந்து விட்டது. விநாயகரை மீண்டும் பேரூருக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது விக்கிரகத்தை அசைக்க முடியவில்லை. விநாயகர் விருப்பத்தோடு அமர்ந்த தலம் ஈச்ச னாரி, ஆதலால் பக்தர்கள் விரும்பும் வரங்கள் எளிதில் கிடைக்கின்றன.

27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை இந்த ஆலயத்தில் நடக்கும் ஒரு சிறப்பு பூஜை. அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்படு கிறது. இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இடையில் நடை சாத்துவது இல்லை. உசத்காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த ஜாமம் என ஆறுகால பூஜைகள் தினமும் நடை பெற்று வருகின்றன. ஆண்டுதோறும் தமிழ் வருடப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி போன்றவை ஏகதின உற்சவமாக நடைபெறுகின்றன.