Pages

தசரா தலங்கள்


மதுரை

மதுரை-மீனாட்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரி நாட்களில், திருவிளையாடல் சம்பவங்களை ஒட்டியே மீனாட்சியம்மனை அலங்கரிக்கிறார்கள்.

ஜகதல்பூர்

சட்டீஸ்கர் மாநில பாஸ்தார் ஜில்லாவில் உள்ள ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயத்தில் 75 நாட்கள் தசரா விழா நடைபெறுகிறது. பழங்குடியினரோடு இணைந்து நடத்தப்படும் விழா இது. அந்த பழங்குடிகள் தங்கள் பிரிவுக்குத் தக்கபடி தெய்வச் சிலைகளுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு தண்டேஸ்வரி ஆலயத்திற்கு வருவர். பின் அவள் முன் தசரா விழாவைத் தொடங்குவர். 75 நாட்களும் காலையும் மாலையும் வீதியுலாவுடன் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

கோவை

கோவை ராஜவீதியில் உள்ள சௌடாம்பிகை அம்மனை ஊர் எல்லை தேவதை கோயிலில் இருந்து பூர்ண கும்ப தீர்த்தத்தில் எழுந்தருளச் செய்து அழைத்து வருவர். அப்போது சிறுவர், இளைஞர், முதியோர் அனைவரும் கத்திகளால் நெஞ்சு, வயிறு, தோள்களில் அலகு போட்டுக் கொண்டே அம்மன் பெயரை உச்சரித்தவாறு வீதியுலா வருவது வழக்கம்.