Pages

16. பூமியின் ஓசோன் திரை


இப்பொழுது, நமது பூமிக்குப் பரவலாக இருக்கும் “ஓசான்திரை” என்று விஞ்ஞானிகள் கூறுவது போல, விஷத்தன்மைகள் அனைத்தும், நமது பூமியின் சுழற்சி வட்டத்தின் மேற்பரப்பில், அதிகமாக, அடர்த்தியாகிக் கொண்டே செல்வதைக் காணலாம். 

எப்படி, ஒரு ரைஸ்மில்லில், மொத்தமாகப் போடும் பொழுது, சிறு பாதையில் சென்று, அது தோல்களைப் பிரிக்கின்றதோ, இதைப் போல நமது பூமி, அந்த விஷத் தன்மையின் தன்மையை மேல் அடர்த்தியாக வைத்து, தனக்குத் தேவையான உணர்வைச் சுவாசித்து, நமது பூமிக்குள் ஒரு இயக்கச் சக்தியின் தன்மையாக, மாற்றிக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

அந்த விஷத்தன்மைகள், துருவத்தில் உறையும் தன்மையையும், பின் வெப்பத்தால் ஆவிகளாக மாறும் தன்மையையும், மீண்டும் காற்று மண்டலத்தில் செல்வதையும், இதைப் போல உறையும் தன்மை கொண்டு, நீராக வடிவதையும், நமது பூமி தன் செயலாக்கங்களாக மாற்றுகின்றது. 

17. அகஸ்தியன் ஒளியான நிலை அகஸ்தியன் துருவனாகி, துருவ நட்சத்திரமான அவர், அவர் உடலிலே விளைந்த உண்மையின் நிலையை அறிந்தார். அதன் வழி நமது குருநாதரும் இதை அறிந்தார். அதன் உணர்வு கொண்டு, நமக்குள் பதிவாகி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் தன்மையைப் பெறச் செய்ததனால், அவர் கண்ட அகஸ்தியன் கண்ட உண்மையின் தன்மையை, யாம் அறியும் தன்மை பெற்றது.

அதே உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி, உங்கள் நினைவை நினைவாக்கப்படும் பொழுது, இதை நீங்கள் மீண்டும் எண்ணினால், அந்த அகண்ட அண்டத்தையும், ஆதிசக்தியின் ரூபங்கள், எத்தனையோ வகையான இந்த உணர்வுகள், இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் நீங்கள் அறியலாம்.

ஆக, இதன் உணர்வு, உங்கள் உடல் ஒரு பிரபஞ்சம் என்ற உண்மையும், ஜீவ அணுக்கள் என்ற நிலையும், திரேதாயுகத்தில், இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, உங்களுக்குள் இருளை அகற்றி, நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க, உயிர் ஒளியான உணர்வின், ஒளியாக மாற்றிய அந்த உணர்வுகளை, நாமும் பெறலாம். 

18. அகஸ்தியன் தாய் தந்தையர் நுகர்ந்த தாவர இனங்களின் மணங்கள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், அகஸ்தியன், அவன் தன் தாய் கருவிலே வளரும் பொழுது, அந்தத் தாய் தந்தையர் நுகர்ந்த உணர்வுகளும், அவர்கள் பரப்பிய தாவர இனங்களின் உணர்வின் மணங்களும், இப்பொழுது உங்களுக்குள் வரும்.


பலவிதமான மணங்கள் வரும். இப்பொழுது, உங்கள் உடலுக்குள் சலிப்போ, சங்கடமோ, சஞ்சலமோ, வெறுப்போ, இதைப் போன்ற உணர்வுகள் வந்தால், அது ஒடுங்கும்.


தாவர இனத்தின் வலுவால், விஷத்தன்மை கொண்ட ஜெந்துக்கள் தன்னைத் தாக்கிடாது, அந்தப் பாதுகாப்பான நிலைகள் வரும் பொழுது, அந்த மணத்தையும், அகஸ்தியனுடைய தாய் நுகர்கின்றது.


அந்த உணர்வுகள் தாயின் இரத்தத்தில் உறைகின்றது, கவர்கின்றது, கலக்கின்றது. அதனை, தாயின் கருவிலே உருவாகும் அந்த அகஸ்தியன் என்ற உணர்வுகள், பெறப்படுகின்றது.


விஞ்ஞான அறிவால், சக்தி கொண்ட எந்திரங்களை வைத்து, கருவில் இருக்கும் குழந்தையை, இன்று எப்படிக் காண்கின்றார்களோ, அதைப் போன்று, மெய்ஞானி வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைகளை ஊடுருவிப் பாய்ச்சி, இந்த உணர்வின் தன்மையை நீங்கள், எண்ணத்தால் இதைப் பாய்ச்சப்படும் பொழுது, அன்று தாய் கருவிலே அகஸ்தியன் பெற்ற உணர்வை, உங்களால் உணரமுடியும்.


அவர்கள் பரப்பிய ஈர்ப்பு வட்டத்திற்குள், மற்ற உயிரினங்கள் அதைக் கண்டு, அதன் வீரியத் தன்மை பிரிந்து, அது நகர்ந்து ஓடுவதையும், நீங்கள் இப்பொழுது உங்கள் உணர்வால் பார்க்கலாம்.


அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்கள் உடலிலே விளைந்து, அதனதன் ஜீவ ஜெந்துக்கள், இதை நுகர்ந்தபின், நகர்ந்து சென்ற அந்த உணர்வின் அந்த ரூபங்களை, அக்கால உணர்வின் தன்மையை நீங்கள் இப்பொழுது பார்க்கலாம்.
19. அகஸ்தியன் நுகர்ந்த மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து, தீமைகளை அடக்குதல்
அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பெற்ற அந்தத் தாவர இனத்தின் மணங்களை, நீங்கள் இப்பொழுது உங்களுக்குள் நுகரும் சக்தி பெறுங்கள். உங்கள் உடலுக்குள், அந்த உணர்வுகள் செல்லச் செல்ல, ஒரு வித்தியாசமான உணர்ச்சிகள், உங்கள் உடலிலே தோற்றுவிக்கும். நுகரும் மணத்தில் வித்தியாசமான மணங்கள் வரும்.


இப்பொழுது, நம் வாழ்க்கையில் காணும் மணத்தைக் காட்டிலும் இந்த மணங்கள் வித்தியாசமாக வரும். சில உடல்களில், நோய்களின் தன்மை இருந்தால், இந்த உணர்வுகளை நுகரும் பொழுது, அது ஓடி ஒடுங்குவதை, உங்கள் உடல்களில் பார்க்கலாம். உணரலாம். இப்பொழுது பல பல மணங்கள் வரும்.


உங்கள் உடலில், இதற்கு முந்திய எதிர்நிலையான அணுக்களுக்கு மாறாக, இப்பொழுது நாம் சுவாசிக்கும் மணங்கள், எதிர் நிலைகளை அதை ஒடுக்கும்.


அகஸ்தியனின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது, உங்கள் உடல்களில் பலவிதமான, வித்தியாசமான நல்ல உணர்வுகளும், அந்தத் தாவர இனத்தின் மணமும், உங்களுக்குள் கடும் வெறுப்போ, வேதனையோ, இதைப் போல அவைகளை அடக்கும் உணர்ச்சிகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவும்.


இப்பொழுது, அகஸ்தியனின் உணர்வுகள் உங்களுக்குள் பட்டபின், யாம் இதற்கு முதலில் சொன்ன, “ஆதிசக்தியின் உணர்வின் தன்மையை”, அந்த உயர்ந்த உணர்வினை அறிந்திடும் உணர்வும், ஆனந்த நிலையும் பெருவீர்கள். அருள் உணர்வுகள், உங்களுக்குள் உருவாகும் கருவாக இப்பொழுது உருவாகின்றது.


இப்பொழுது, இந்தக் காற்றிலும், ஒரு அற்புதமான, ஒரு தென்றலின் மணம் வரும். அகஸ்தியன் காலத்தில் நுகர்ந்த, அந்த மூலிகையின் மணங்கள் இப்பொழுது உங்களின் சுவாசத்திற்கு வரும்.


இது உங்கள் உடலில் படரப்படும் பொழுது, பல வித்தியாசமான உணர்வுகள் தோன்றும். ஆக, வெறுப்பு, சலிப்பு, சஞ்சலம், என்ற நிலையை அடக்கும். சிந்திக்கும் ஆற்றலை ஊட்டும்.


யாம் இந்நேரம் வரையில் சொன்ன, அகண்ட உணர்வுகளுக்கு உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள். அகஸ்தியன் அறிந்த பேருண்மையை, நீங்கள் அறியும் ஆற்றலை, இப்பொழுது பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.


இப்பொழுது உங்களைச் சுற்றி, ஒரு ஒளி வரும். இப்பொழுது பதிவு செய்த உணர்வுகள் அனைத்தும், அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்தில், நாம் அனைவரும் வாழ்கின்றோம்.


அகஸ்தியன் நஞ்சினை வென்றிட்ட, அந்தப் பேரருள் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து, இந்த உணர்வினை நுகர்ந்து, உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.


அகஸ்தியன் பெற்ற பேரருள், எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களின் கலந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று இந்த உணர்வின் தன்மையும், உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று, ஏங்கி தியானியுங்கள்.

II. ஞானகுரு நம்மிடம் எதிர்பார்ப்பது
1. அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் நிலை
இப்பொழுது அகஸ்தியன் கண்ட பேருண்மையை நாம் அனைவரும் அறிந்தோம். வான்வீதியில் என்ன நடக்கின்றது என்பதையும், இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி நடக்கின்றது என்பதையும் உணர்ந்தோம்.


உங்கள் உடலில், இப்பொழுது பல அற்புதங்கள் நடந்திருக்கும். இந்த உணர்வுகள் நன்றாக, உங்களுக்குள் பரவி இருக்கும். பேருண்மையின் உண்மையின் சக்தியை, நீங்கள் அறியும் தன்மை பெற்றிருக்கிறீர்கள். இதைத்தான், இப்பொழுது யாம் பதிவு செய்தது.


இதன் வழிப்படி, இனி உங்கள் எண்ணத்தில்தான் கொடுக்க வேண்டும். அதை நீங்கள் வளர்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் வளர வேண்டும். பிறருடைய தீமைகளை நீங்கள் போக்கக் கூடிய சக்தியாக மாற வேண்டும். உண்மையின் நிலையை, இந்த உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.


நமது குரு வழியில் எமக்குக் கொடுத்த, இந்த உண்மைகளை எனக்கு எப்படிப் பாய்ச்சினாரோ, அதன்வழியில் தான், உங்களுக்கும் இப்பொழுது பாய்ச்சினேன். இந்த உணர்வை நீங்கள் எடுத்து வளர்ப்பது, இனி உங்களுடைய பொறுப்பாகும்.


சாமி கொடுக்கவில்லை, என்று எண்ண வேண்டாம். உணர்வை நீங்கள் எடுக்கவில்லை என்ற நிலை இல்லாதபடி, “அதை எடுப்போம், வளர்ப்போம், உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டுவோம்”, என்ற இந்த நிலைக்கு நீங்கள் எல்லோரும் வாருங்கள்.

ஆக, இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நமக்குச் சொந்தமானது எல்லாம், உணர்வும், உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக, அகஸ்தியன் பெற்ற பேருண்மையை நாம் பெறுவதே ஆகும். அதைப் பெற முடியும், என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.