Pages

4. கோள்கள் தனது வளர்ச்சியில் நட்சத்திரமாதல்


கோளின் சுழற்சி வேகம் கூடும்பொழுது,
வெப்பத்தின் தணல் கூடுகின்றது.
வெப்பத்தின் தணல்,  நடு மையம் அதிகமாக,
தன் அருகிலே இருப்பதனைத்தையும் அமிலமாக மாற்றுகின்றது.
இவ்வாறு, பல கலவைகள் ஒன்றாகி, ஒரே ரூபமாக, ஒரே அமில சக்தியாக மாறுகின்றது.  முதலில் நீரானது,  பின் அமிலத் தன்மை அடைகின்றது.
அமிலத்தன்மை அடைந்தபின், அதிலிருந்து உமிழ்த்தும் நிலைகள்
அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்கின்றது.
இதைக் கடந்து வெளிச் சென்றபின், உறைவதும்,
உறைந்த பின், அதனின் ஈர்ப்பில் சுழல்வதும்
என்ற நிலைகள் அடைகின்றது. இப்படி அடைந்ததுதான் நட்சத்திரம்
உதாரணமாக, நூலம்படைப் பூச்சி எவ்வாறு தான் உணவாக உட்கொள்வது அனைத்தையும், அது நூலாம்படை போல, தனக்குள் மலங்களை வெளியிடும் பொழுது, கூடாக அமைத்து விடுகின்றது.
அதிலே எப்பொருள் சிக்கினாலும், உணவாக எடுத்துக் கொள்கின்றது. சிலவற்றை, தனக்குள் பெற்ற விஷத்தின் சக்தியைப் பாய்ச்சுகின்றது. அப்படிப் பாய்ச்சப்படும் பொழுது, அதற்குள் அணுக்கள் மாற்றமாகி, அந்த நூலாம்படைப் பூச்சி போல கருவாக உருவாகின்றது.
இதைப் போன்றுதான்,
நட்சத்திரம் தன் மலங்களை வீசப்படும் பொழுது,
வீசியது அனைத்தும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும் பொழுது,
தூசிகளும் துகள்களும் அதற்குள் சிக்கி விடுகின்றது.
இது பால்வெளி மண்டலங்களாக மாறுகின்றது.
இருப்பினும், அதனுடைய சுழற்சியின் வேகத்தில்,
மீண்டும் இது தூசிகளாக மாறுகின்றது.
இதன் சுழற்சியில் தனக்குள் உணவாக உட்கொண்டு,
இந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாகும் சக்தி பெறுகின்றது.