skip to main |
skip to sidebar
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, பல மைல் உயரத்தில் விமானத்தில் சென்று,
காந்தப்புலனறிவை உயரத்திலிருந்து பாய்ச்சி, நீர் எங்கு அதிமாக உள்ளது?
எந்தப் பாறை உள்ளது? என்று கண்டுணருகின்றனர், விஞ்ஞானிகள். அவர்கள், பூமி
தன் ஆத்மாவாக எடுப்பதைத்தான் அவ்வாறு கண்டுணர்ந்து, அதன் மூலமாகத்தான்,
இதையெல்லாம் அறியும் நிலை பெறுகின்றனர்.
மகரிஷிகள்
பண்டைய காலங்களில், அவர்களது நுகரும் சக்தியால், இப்பூமிக்குள் இருக்கும்
வெப்ப நிலையையும், அது அனைத்தும் ஆவியாக மாறி, தாவர இனங்களாக மாறி,
பரமாத்மாவில், தாவர இனச்சத்து, சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டுக்
கலப்பதை அறிந்துணர்ந்தார்கள்.
தம் உடலில் உள்ள,
உணர்வின் இயக்கத்தைக் கண்டறிந்த அம்மகரிஷிகள், தம் எண்ணத்தைப் பூமிக்குள்
செலுத்தி, அதற்குள் இருக்கும் தாவர இனச்சத்தையும் பாறைகளின் நிலையையும்
நுகர்ந்தறிந்தார்கள்.
இன்றைய விஞ்ஞானிகள்,
இயந்திரத்தின் துணைக் கொண்டு கண்டுணர்கின்றனர். அன்றைய நிலையில், மகரிஷிகள்
பூமிக்குள்ளிருக்கும் வெப்ப நிலைகளையும், மாற்றங்களையும், காடுகள்
உருவாகின்றதையும், தம் உணர்வின் ஆற்றலால், கண்டுணர்ந்தார்கள்.
ஒரு உயிரணு, தனக்குள் நுகர்ந்து, உணர்ந்து உடலாகும் நிலையும்,
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையும்,
மனிதனானபின், தன் ஆற்றல்மிக்கச் சக்தியால்,
தாம் கண்டுணரும் சக்தி பெற்று,
இந்த பூமிக்குள் இருக்கும் செயலாக்கத்தை
தன் உடலில் இருக்கும் உணர்வலைகளைச் செலுத்தி,
அதையெல்லாம் அறிந்து கொண்டனர்.
அகத்தியர் என்பவர், முதல் மனிதனாக
இயற்கையின் மாற்றம் எவ்வாறு ஆகின்றது?
இயற்கையின் அணுவின் ஆற்றல்,
எவ்வாறு ஆகின்றது?
அணுவின் வளர்ச்சி எவ்வாறு ஆகின்றது?
என்ற நிலைகளைக் கண்டுணர்ந்தார்.
பூமிக்குள் நடக்கும் செயல்களையும், உறைந்த நிலைகளும், விண்ணின்
ஆற்றல்களையும், வேறு பிரபஞ்சத்தில் ஏற்படும் சில நிலைகளையும், அவர்
அறிந்துணர்ந்தார்.
நமது பூமிக்குள் ஏற்படும்
மாற்றங்களையும், பூமியிலிருந்து வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி
கவர்ந்து பூமியில் பரமாத்மாவாக மாறுகிறது என்ற நிலையையும் அவர் தெளிவாகக்
கண்டுணர்ந்து, அவர் உடலில் வளர்த்துக் கொண்ட, உணர்வின் அலைகளைச் சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து, இன்றும் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
விண்ணுலகின் ஆற்றலைக் கண்டுணர்ந்த, முதல் முதல் மனிதனான அகத்தியர்,
புழுவிலிருந்து மனிதனாக மாறி, பேரண்டத்தின் சக்தியையும், பூமிக்குள்
இருக்கின்ற சக்தியையும், பூமிக்குள் இருக்கும் உணர்வலைகளையும்,
கண்டுணர்ந்தார்.
தனக்குள் (மனித உணர்வுக்குள்)
கண்டுணர்ந்ததைச் சக்தி வாய்ந்ததாக மாற்றி, தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி,
எதனையும் அறிந்திடும் ஆற்றல்மிக்க உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்துக்
கொண்டு, தனக்குள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டவர், அகத்தியர்.
அவர் அணுவின் ஆற்றலை அறிந்தவர் என்று சொல்வார்கள். இன்று கதைகளில் வரும்
அகத்தியர் இவரல்ல. அன்று, பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன், முதல் மனிதனாக,
விண்ணின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவரே, அகத்தியர்.
சந்தர்ப்பவசத்தால், அவருக்கு இத்தகைய ஆற்றல் கிடைக்கின்றது.
அவர் கற்றுணர்ந்த இந்த உணர்வுகள்,
அவர் உடலிலே விளைந்த
ஆற்றல்மிக்க சக்திகள், இன்றும், பூமியிலே பரமாத்மாவில் கலந்து, படர்ந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் நுகரவே இந்த உபதேசம்.
அகண்ட அண்டத்தில் சூரியன், எத்தனையோ மைல் பரப்பளவு கொண்டது என்று
சொன்னாலும், நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, நமது நெற்றியில் பொட்டு
வைப்பது போன்றுதான், காண முடிகின்றது. ஆனால், நமது பிரபஞ்சத்தில் வியாழன்
கோள் மிகவும் பெரிதானது. அதை நாம் பார்க்க முடிகிறதா என்றால், இல்லை.
சனிக் கோளைப் பார்க்க முடிகின்றதா என்றால், முடியவில்லை. அது நுகர்ந்து
எடுக்கும் உணர்வுகள், அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் வெளி வரும்பொழுது,
இரண்டும் மோதலில் உறைந்து, வளையம் போல் சுழன்று, அது தனக்குள் இத்தகைய
நிலைகளை உருவாக்கும் நிலைகள் பெற்றது.
அது கரைந்து
வரும் உணர்வின் நிலைகளை, சூரியன் காந்தப் புலனறிவு கவர்ந்து, மற்ற
நட்சத்திரங்களின் உணர்வுகளுடன் கலக்கின்றது. அவ்வாறு இணைந்து
இருந்தால்தான், ஒன்றுடன் ஒன்று இணைந்து கலக்கும் சக்தியும், வளரும்
பருவமும், உருவாகும் தன்மையும் பெறுகின்றது.
ஆகவே
சனி, அனைத்தையும் பெருக்கும் சக்தி பெற்றது. சனிக்கோள் செயலிழந்து
விட்டால், நமது பூமியில் நீர் நிலைகளே இல்லாது போய்விடும். நீர் நிலைகள்
இல்லையென்றால், நம் பூமியில் உயிரினங்கள் வாழமுடியாது.
வான் வீதியில், மற்ற கோள்களில் நீருடன் கலந்திருக்கும் பொழுது பாறைகள்
உருவாகின்றது. அது இணைந்திடும் நிலைகள் கொண்டு, நடு மையம் ஏற்படும்
வெப்பத்தால், தன் அருகில் இருப்பதை உருக்குகின்றது.
அவ்வாறு உருக்குவதும், ஆவியாக மாற்றுவதும்,
கோள்கள் அதை வெளித் தள்ளுவதும்,
பல வித்தியாசமான பொருள்கள் உருமாறுவதும்,
நமது பூமியிலும் சரி, மற்ற கோள்களிலும் சரி,
இவ்வாறு வருகின்றது,
இதுவெல்லாம் துருவன் கண்டுணர்ந்தவை. அவனில் கண்டுணர்ந்து வெளிப்பட்ட
முச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு, நம் பூமியிலும் பரவியுள்ளது. இதைத்தான்
நமது குருநாதர் நுகரும்படி செய்தார்.
பிரபஞ்சத்தின்
இரகசியமும், பேரண்டத்தின் அகண்ட நிலையையும், உணர்வுப் பூர்வமாக உணர்ச்சிகள்
எப்படி இயக்குகின்றது? உணர்ச்சிகள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையையும்
தெளிவாக்குகின்றார் நமது குரு. அந்தத் தெளிவான உணர்வின் தன்மையைத்தான்,
சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள், சூரியனின் காந்தப்
புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
உங்களுடைய நினைவுகள்,
கூர்மையாக நினைவாற்றலைச் செலுத்தும் பொழுது,
உணர்வுகள், உங்களுக்குள் பதிவாவதும்,
பதிவான பின், ஈர்க்கும் சக்தி வருவதும்,
நுகரும் சக்தி பெறுவதும்,
உயிருடன் ஒன்றி, உடலுக்குள் பரப்பும் சக்தி பெறுவதும்,
இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றது.
அதன்வழி உங்களுக்குள் வரும் சக்தியின் நிலைகளை, நீங்கள் நுகருவதற்கு,
உங்களில் பதிவாகி, பதிவான உணர்வின் துணை கொண்டு, அகண்ட அண்டத்தின் நிலைகளை,
நீங்கள் அறியும் பருவம் பெறுகிறீர்கள்.
அகண்ட
அண்டத்திலிருந்து வரும் உணர்வுகளைக் கவர்ந்து, “என்றும் மரணமில்லாப்
பெருவாழ்வு” என்ற நிலையை அடைந்திடும் நிலையும், “ஒளியின் சரீரமாக
உருப்பெறும் சக்தியும்”, நீங்கள் பெறும் தகுதியை, இப்பொழுது உபதேசிக்கும்
வாயிலாக, உங்களுக்குள் அருள்ஞான வித்தாகப் பதிவாக்கப்படுகின்றது.
எமது குருநாதர் எமக்கு உருவாக்கியது போன்று, உங்களுக்குள்ளும் இதை
உருவாக்கி, நினைவினை வலுக்கொண்டு நுகரப்படும் பொழுது, அதனைப் பெறும்
நிலையும், உருவாக்கும் நிலையும், நீங்கள் பெறுகின்றீர்கள்.
6 நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரொளியை உணவாகக் கொடுக்கும் வழி
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும், நாம்
பெறவேண்டும் என்ற ஆசையுடன், நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள்
அனைத்தும் பெறும் வண்ணம், தியானித்து வருகின்றோம்.
தினம் தினம், அதிகாலை 4.00 – 6.00 மணிக்குள், ஒரு அரை மணி நேரமாவது
உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள், அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற, நீங்கள் தியானித்துப் பழக
வேண்டும். இதை நீங்கள் தலையாயக் கடமையாகப் பழக வேண்டும்.
நம் உடலுக்கு, நாம் எப்படி ஆகாரத்தைச் சாப்பிடுகின்றோமோ, அதைப் போன்று,
நம் உடலில் உள்ள அணுக்களுக்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப்
பெறச் செய்ய வேண்டும்.
நம் பூமியில், 27
நட்சத்திரங்களில் இருந்து வரும் உணர்வுகள், புவி ஈர்ப்பின் துணை கொண்டு,
கவர்ந்து, அது மின்னலாகப் படருகின்றது. சில நட்சத்திரங்களின் உணர்வுகள்,
எப்பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ, அந்தந்த நட்சத்திரங்களின்
குணங்களுக்கு ஒப்ப, மண்ணுடன் கலந்து வைரங்களாக விளைகின்றது. இதைப் போன்று,
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்,
நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு,
சிறுகச் சிறுகச் சேர்க்க, அந்த ஜீவ அணுக்கள்
உயிரைப் போலவே, உயிரணுவாக மாறிவிடும்.
இந்த உடலில் உள்ள, பல கோடிக்கணக்கான ஜீவ அணுக்களையும், உயிரைப் போலவே, உயிரணுவாக மாற்றும் பொழுது,
ஓர் ஒளியின் உடலாகவும்,
எத்தகைய விஷத்தன்மையும் ஒளியாக மாற்றும் திறனையும்,
நமது உயிர் பெறுகின்றது, என்பதனை நாம் அறிதல் வேண்டும்.
7 ஈஸ்வராய குருதேவர் உற்று நோக்கிய 2000 சூரிய குடும்பத்தின் உணர்வுகள்
எமது கண்ணின் நினைவாற்றலை
விண்ணிலே செலுத்தச் செய்து, நமது பிரபஞ்சம், எப்படி 2000 சூரிய
குடும்பத்துடன் தொடர்பு கொண்டு வாழ்கிறது? என்றும், அதன் கலவையின்
நிலைகள், இந்த உடலின் நிலைகளுக்கு உண்டு என்றும், நமது குருநாதர் மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.
இந்தப்
பிரபஞ்சத்தின் இயக்கங்கள், நட்சத்திரங்கள் அதனுடைய தன்மையைக் கவர்ந்து,
நட்சத்திரங்களுக்கு எப்படி வீரிய உணர்வு வருகிறது என்று காட்டினார்.
நட்சத்திரங்கள் கவர்ந்து வெளிப்படுத்துவது, தூசிகளாகப் பறக்கப்படும் பொழுது
அதை சூரியனின் காந்த சக்திகள் கவருவதைக் காட்டினார்.
இவை இரண்டும் மோதும்பொழுது ஒளிக்கதிர்களாக ஓடுவதும், ஒளிக்கதிர்கள்
மற்றொன்றோடு எப்படிச் சேருகின்றது என்றும், அதன் வழி மற்றதோடு சேர்ந்து,
ஒன்றுடன் ஒன்று உராய்கின்றது என்று காட்டினார்.
ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது,
எப்படி வெப்பம் வருகின்றதோ
இதைப் போன்றுதான், மின் கதிரின் உணர்வுகள்
மற்றதுடன் கலந்து எவ்வாறு உருவாகின்றது?
என்ற நிலைகளை குருநாதர் தெளிவாகக் காட்டினார்.
பின், அகண்ட அண்டத்தையும்,
அதன் நிலைகளை நம் பிரபஞ்சம் நுகர்வதையும்,
பிரபஞ்சத்திற்குள் நுகர்ந்த உணர்வின் சக்தி,
‘’நான் கண்ட உணர்வை
உனக்குள் பதிவு செய்கின்றேன், உற்று நோக்கு’’
என்று கூறினார்.
‘’இந்த 2000 சூரிய குடும்பத்தின் உணர்வுகளை, உன்னால் அறிய முடியும்,
உணர்வின் ஆற்றலை நீ பருக முடியும்,
அதன் தொடர்பு கொண்டுதான் நீ வாழுகின்றாய்”.
எண்ணத்தின் வலுகொண்டு,
அதைப் பெறவேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது,
2000 சூரிய குடும்பங்களிலிருந்து வரும் அனைத்திலும்,
உன் நினைவின் ஆற்றல் ஊடுருவி,
அதனுடன் கலந்து இணையும் சக்தி வருகின்றது.
அந்த இணைந்த உணர்வுகள் நீ பெறும் பொழுது,
உனக்குள் அறிவின் தெளிவும்,
உனக்குள் இருளை அகற்றிடும் ஆற்றல் மிக்க உணர்வுகளும், நீ பெறுகின்றாய்’’ என்று உணர்த்தினார்.
‘’நம் சூரியன், மற்ற பிரபஞ்சத்தின் உணர்வுகளின் தன்மை கொண்டு, ஒளியாகச்
சுழன்று இந்தப் பிரபஞ்சத்தை வளர்க்கின்றது. இதைப் போன்று, அகண்ட
அண்டத்திலிருந்து வரும், மற்ற கோள்களின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று
உராய்ந்து, உணர்வின் ஒளிகள் வெளிப்பட்டு, உன் உடலுக்குள் ஊடுருவும்
உணர்வின் தன்மையை உன்னுடைய உயிர் இயக்குகின்றது’’.
மற்ற மண்டலத்திலிருந்து வருவதை, சூரியன் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்தில்
எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகின்றதோ, இதைப் போன்றுதான் உனது உடலிலும்,
உணர்வின் அறிவாக அறியும் சக்தியும், அதன் இயக்கத்தைத் தனக்குள் அடக்கிச்
செயல்படுத்தும் நிலையும், வருகின்றது.
உனக்குள் பதிந்த நிலைகளை,
உன்னைப் பின்பற்றுபவரிடம் பதிவாக்கும் பொழுது,
எவர் இந்த உண்மையின் உணர்வைப் பின்பற்றுகின்றாரோ,
அவரும் அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மை வருகின்றது’’.
அகண்ட அண்டத்தை அறிந்த அகஸ்தியர், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ
நட்சத்திரமான அந்த பேரொளியைப் பெற முடியும். அந்த ஒளியின் தன்மை
பெறும்பொழுது, இருளென்ற நிலைகளை நீக்கி, அந்த வலுவின் தன்மை கொண்டு,
ஒளியின் சரீரமாக முடியும்.
அனைவரும் ஒளியின் சரீரம் பெற வேண்டும்,
என்ற உணர்வு உனக்குள் வரும்பொழுது,
அவரில் வரும் தீமையின் உணர்வை அடக்கி,
உனக்குள் ஒளியாக்கும் உணர்வின் தன்மையை,
வளரச் செய்யும் முறையே இது என்று குருநாதர் உபதேசித்தார்.
அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று, அகண்ட அண்டத்தையும் தன்னுள்
நுகர்ந்து, ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார், அதன்
அறிவைத்தான் செவி வழி ஓதி, நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி, இதனுடன் சுழன்று,
உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது, அகண்ட அண்டத்தில் வருவதையும்,
உங்கள் உணர்வுக்குள், அது பெறும் உணர்ச்சியின் நிலையை அணுவாக மாற்றும் நிலை
கொண்டு, அது உருப்பெற்று விட்டால், தன்னிச்சையாக அது நுகரும் சக்தி
பெறுகின்றது.
உங்களால் நினைத்த நேரத்தில், அகண்ட அண்டத்தினையும், அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.
அதில் வெளிப்படும் உணர்வில், அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்து,
பகைமை உணர்வு உங்களுக்குள் வராது, “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள்
உருவாக்க முடிகின்றது, எமது அருளாசிகள்.
நம் குரு,
என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின்
நினைவைப் பதித்து, உங்கள் கண்ணின் நினைவை, என்னிடத்தில் செலுத்தினாலும்,
நீங்களும், அண்டத்தில் மிதக்கின்றீர்கள். அதனின் உணர்வை, நினைவை கொள்ளும்
பொழுது, அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.
அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன், துருவனாகி, துருவ நட்சத்திரமானான்.
அவன், அகண்ட அண்டத்தில் வருவதை, ஒளியாக மாற்றுகின்றான்.
அதன் உணர்வின் தன்மை, இந்த பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது,
அகண்ட அண்டத்தில் வருவதையும்,
ஒளியாக மாற்றிடும் திறன்,
நீங்கள் பெற வேண்டும்.
நீங்கள் சிறிதளவே இருப்பினும், இந்த உணர்வின் தன்மை, உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது.
ஆகவே, இந்த மனித உடலில் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி, இந்த
வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட்டு, சர்வத்தையும்
ஒளிமயமாக்கும் அருள் சக்தி பெறுவோம் என்று பிரார்த்தித்து, குரு அருள்
உங்களுக்குள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று
பிரார்த்திக்கின்றேன்.
நம்மை அறியாது
ஆட்டிப்படைக்கும் சக்தியில் இருந்து மீண்டு, அருள் வாழ்க்கை வாழ்வோம்.
அனைவரும், தெளிந்த மனம் கொண்டு வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்,
தியானிப்போம். எமது அருளாசிகள்.